மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் போலீஸ் கைது செய்தது. சினேகம் பவுண்டேஷன் உரிமை தொடர்பான புகாரில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவின்படி பாஜக மாநில மகளிர் அணி துணைத் தலைவி ஜெயலட்சுமி வீட்டில் போலீசார் சோதனை நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் வீட்டில் 3 மணி நேரம் சோதனை நடத்திய போலீசார் விசாரணைக்காக திருமங்கலம் காவல் நிலையம் அழைத்து சென்ற நிலையில் கைது செய்யப்பட்டார். சினேகம் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தம் என்பதில் பாடலாசிரியர் சினேகன் – நடிகை ஜெயலட்சுமி இடையே பிரச்சனை நீடித்து வந்தது. சினேகம் பவுண்டேஷன் உரிமை தொடர்பான புகாரில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.