முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 23 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், புழல் சிறையில் இருந்தவாறு காணொளி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பாக   முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதார்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 6ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 23 வது முறையாக  நீட்டிக்கப்பட்டுள்ளது.