முதல்வர் ஸ்டாலின் இல்லம் உட்பட7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொலைபேசியில் வந்த மிரட்டலை தொடர்ந்து, முதல்வரின் இல்லத்தில் மோப்ப நாயுடன் போலீசார் நடத்திய சோதனையில், அது புரளி என தெரியவந்துள்ளது. விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் உதகையை சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்ததை அடுத்து, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்