பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கட்டு கட்டாக ரூ.10 கோடி அளவில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் தொடர்புடைய இடங்களில் நான்காவது நாளாக சோதனை நடைபெற்றுவரும் வேளையில், கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட நகைகளை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.