வங்க கடலில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மிக்ஜாம் புயல் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 67 குடிசைகள் சேதமடைந்துள்ளன.