சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் உதவிக்கு அழைக்க வாட்ஸ்-அப் எண்ணை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. தற்போது ஆந்திர கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில் மிக்ஜாம் புயல் நகரத் தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து 90 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருந்த மிக்ஜாம் புயல் தற்போது 100 கி.மீ தொலைவில் வடகிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு உதவி தேவைப்பட்டால் +91 94454 77205 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பலாம். 04425619207, 04425619206, 04425619204 என்ற தொலைபேசி எண்களுக்கும் அழைக்கலாம்.