தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து வினாடிக்கு 11,209ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 8000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர் திறப்பால் ஏரியை சுற்றியுள்ள பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளம் செல்வதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரையோர பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. முகாம்களில் மக்கள் சிரமமின்றி தங்கவும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.