ஈரோடு பிரப் ரோடு வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு மாறி பதிவாவதாக புகார் எழுந்துள்ளது. இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப் போட்டால் கை சின்னத்தில் லைட் எரிவதாக அதிமுகவினர் புகார் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து 178வது வாக்குசாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள 45வது வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.