மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கான சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம்! அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், கோதுமை உள்ளிட்ட விளைபொருட்களுக்கான அடிப்படை ஆதார விலையை உயர்த்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.