மக்களவையில் காங்கிரஸ் அளித்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்டார். அதன் மீது விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இத்தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக திமுக உள்ளிட்ட 26 எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன. ஆனாலும் தீர்மானம் வெல்லும் அளவிற்கு போதிய உறுப்பினர் ஆதரவு இல்லை.