2023 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற +1, +2 மாணவர்களுக்கு வரும் 31ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும். மாணவர்கள், பள்ளியில் இருந்தும், தனித் தேர்வர்கள் தேர்வெழுதிய மையத்திலிருந்தும் அசல் சான்றுகளை பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல், 10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சற்றுமுன் வெளியாகியுள்ளதாகவும் அறிவித்துள்ளது