தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் திமுக – பாஜக இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு சரியாக வானிலையை கணிக்கத் தவறிய மத்திய அரசின் அமைப்பே காரணம் என்று டி.ஆர்.பாலு குற்றம் சாட்டினார். அவரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என பாஜகவினர் முழக்கம் எழுப்ப, பதிலுக்கு திமுக எம்பிக்களும் முழக்கம் எழுப்பினர்.