மேல்முறையீடு செய்ய இன்றுடன் அவகாசம் நிறைவு பெறும் நிலையில், மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து, தாமதமாக குறுஞ்செய்தி வந்தவர்கள் 24ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறுஞ்செய்தி வந்த தேதியில் இருந்து 30 நாட்கள் கணக்கிட வேண்டும் என்றும், இதுவரை 10 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.