தமிழ்நாடு எரிசக்தி துறை முதன்மை செயலாளராக பணியாற்றிய பீலா வெங்கடேசன் (IAS) இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலப் பிரச்னையால் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட பீலா வெங்கடேசன், கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியபோது மக்கள் நலனுக்காக எடுத்த முயற்சிகளால் மாநிலம் முழுவதும் பரவலாகப் பிரபலமானார். அவரது மறைவு, தமிழக நிர்வாகத்துக்கு ஒரு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.