நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. மாலை 4:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பேசப்படும் என்று தெரிகிறது.