சென்னையில் பிப்.20ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதில், சசிகலா உடன் சேர்வது, இபிஎஸ்-க்கு எதிராக அதிமுக பெயரில் தனிக்கட்சி தொடங்குவது உள்ளிட்ட முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால், ஓபிஎஸ் எந்த மாதிரி முடிவு எடுக்கப்போகிறார் என தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.