பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை டெல்லி பல்கலைக்கழகத்தின் ஒலிபரப்புவதற்கு பல்கலைக்கழக நிறுவனம் தடை விதித்த நிலையில், பிபிசி ஆவணப்படத்தை மாணவர்கள் திரையிட முடிவு செய்தனர். இதனால் டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.