தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது, ஆரத்தி எடுத்து பெண்களுக்கு ஓபிஎஸ் ரூ.2000 கொடுத்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பணம் கொடுத்ததாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.