தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டு கட்டாக எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.29 கோடி பணம் சிக்கியது. தொடர்ந்து, அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.