தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன்.1ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதனிடையே, கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருவதால் மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மேலும் ஒருவாரம் விடுமுறையை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை இருப்பதால் பள்ளிகளுக்கு ஒன்றரை மாதம் வரை கோடை விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.