தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் முதல் மாவட்டமாக நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.