கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளது அத்திப்பள்ளி. இந்த பகுதியில் ஏராளமான பட்டாசு கடைகள் இயங்கி வரும் நிலையில் தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்ட பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளன. \

இந்த நிலையில் நேற்று மாலை அத்திப்பள்ளி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு கடை ஒன்றில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் அந்த விபத்தில் சிக்கி பட்டாசு கடையில் பணியாற்றியவர்கள் மொத்தம் 13 பேர் உடற்கருகி உயிரிழந்தனர். மேலும் பலரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.