கேரளாவில் கல்லூரியில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கொச்சியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப பல்கலை யில் நடந்த இசை நிகழ்ச்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில், நெரிசலில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்