மேற்கி., தீவுகள் அணி பேட்ஸ்மேன் டேரன் பிராவோ, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிவெயின் பிராவோவின் சகோதரரான இவர், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாததால், இம்முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். ‘சூப்பர்50’ தொடரில் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையை பெற்ற அவர், அணியில் இடம்பெறாதது மிகவும் வருத்தமளிப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.