நாதகவிற்கு வேறு சின்னம் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரும்பு விவசாயி சின்னம் பறிபோனதால், மாற்றுச் சின்னத்தை நாதக கோரியது. இதனையடுத்து அக்கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கப்பட்டது. அதற்கு பதில் வேறு சின்னம் ஒதுக்க வேண்டும் என நாதக கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், இனி “மைக்” சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.