இந்தியாவை உலுக்கிய பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேரை கடந்த ஆண்டு முன்கூட்டியே குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் அனைவரின் விடுதலையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.