உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று (ஜன. 21) மதியம் ராணுவ பயிற்சி விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி குளத்தில் விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகரின் கே.பி. கல்லூரி மற்றும் வித்யாவாஹினி பள்ளிக்கு அருகிலுள்ள குளத்தில் இந்த விமானம் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தவுடன் விமானத்தில் இருந்த வீரர்கள் சாதுர்யமாக வெளியேறியதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்ததும், ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
यूपी – प्रयागराज में एयरक्राफ्ट गिरा !! pic.twitter.com/pL07qAcItK
— Sachin Gupta (@SachinGuptaUP) January 21, 2026
“>
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நடமாட்டம் மிகுந்த பள்ளிப் பகுதிக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்த போதிலும், விமானம் குளத்தில் விழுந்ததால் தரைப்பகுதியில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
