கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கொல்லம் அருகே சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. SFI அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியதை பார்த்து கொந்தளித்த ஆளுநர், மாணவர்களின் போராட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டி, தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். ஒரு மாநிலத்தின் ஆளுநரே நடுரோட்டில் போராட்டம் நடத்துவது இதுவே முதல்முறை