விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் நாளை சென்னை திரும்பவுள்ள நிலையில் தனியார் பேருந்து கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட ரூ.3000 வரை அதிகமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கட்டணம் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.