தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நெல்லை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்த்துள்ளார்.