அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். 2021 தேர்தலின்போது பிரசார விதிமுறைகளை மீறியதாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து இன்று உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.