விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சிக்குள் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சரியாக கட்சிப் பணியாற்றாத, சர்ச்சையில் சிக்கிய திருவள்ளூர், சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, உள்ளிட்ட 7 மாவட்ட செயலாளர்களை நீக்கி, புதியவர்களை நியமிக்கவும், புதிய மண்டல பொறுப்பாளர்களை அறிவிக்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.