‘மை V3 ஆட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மை V3 ஆட்ஸ் செயலி முடக்கப்பட்டுள்ளது. அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மை v3 ஆட்ஸ் செயலி முடங்கியுள்ளது. இது அரசால் முடக்கப்பட்டதா அல்லது அந்நிறுவனமே செயலி சர்வர்களை முடக்கியதா என்பது தெரியவில்லை. எனினும், செயலி முடங்கியதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.