தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று டிசம்பர் 20ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வரலாறு காணாத கனமழையால் தென் மாவட்டங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளை காடாக மாறி உள்ளது.