காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பெங்களூரு கூட்டத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு கிளம்பினார்கள். அவர்கள் சென்ற விமானம் மத்திய பிரதேச மாநிலம் போப்பாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் விமானம் கிளம்பும் நேரம் உறுதி செய்யப்படவில்லை.