அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையை ஏமாற்ற முயன்றதாக துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 81 லட்சம் ரூபாய்க்கான வருவாய் ஆதாரம் கோரப்பட்டதாகவும் அப்போது போலி ஆவணங்களை கொண்டு இந்தப் பணத்தை கணக்கில் கொண்டுவர பொன்முடி தரப்பினர் முயற்சி செய்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. விசாரணையை தவறாக வழிநடத்த செய்யப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது