உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக ரூபாய்.1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொன்முடி, அவரது மனைவிக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.