சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் மழையின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது சனிக்கிழமை (28.01.2023) அன்று அனைத்து பள்ளிகளும் முழு நேர வேலை நாளாக செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.