செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்களின் வீடு மற்றும்அலுவலகங்களில் ED மீண்டும் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகிறது. பண மோசடி வழக்கில் கைதாகி, புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமின் கோரினார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை செப்.15க்குள் பதில்தர நீதிபதி அல்லி நேற்று உத்தரவிட்ட நிலையில், கூடுதல் ஆவணங்களை கைப்பற்றுவதற்காக 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடக்கிறது.