அமைச்சர் செந்தில் பாலாஜியை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத் துறையின் கைதை தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் வந்து பார்த்து கைதை உறுதி செய்த நீதிபதி, தரவுகளை பதிவு செய்துவிட்டு 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.