விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன் பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர். பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். இந்த வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலைக்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு  ஆலை விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.

விபத்து நடந்த போது 30க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்ததாக தெரிய வருகிறது. இதனிடையே பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. விஜய் என்பவருக்கு சொந்தமான வின்னர் பட்டாசு ஆலையில் விபத்து நடந்துள்ளது. நண்பர்கள் 12 மணி அளவில் வெடி விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. பட்டாசுக்கு மருந்து கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு விபத்து நடந்து இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது