திருச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதால் அவர் திருச்சி மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவியை சற்று முன் ராஜினாமா செய்துள்ளார். திருச்சி மாநகராட்சி 47 வது வார்டு கவுன்சிலரான செந்தில்நாதன் மேயர் அன்பழகனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.