அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஓபிஎஸ் அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலாவை சந்திப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “இதுவரை அதற்கான சூழல் ஏற்படவில்லை. விரைவில் சந்திப்பேன்” என்றார். இருவரும் இணைந்து புதிய வியூகம் வகுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது