கர்நாடகாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹாசனம்பா கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக, பாதுகாப்புக்காக போலீசார் வைத்திருந்த தடுப்பின் மீது மின்சாரம் பாய்ந்ததில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்