குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளது. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மூன்றாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வை தமிழக முழுவதும் சுமார் 18.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

தேர்வு முடிவுகள் குறித்து வெளியாகும் ஆதாரம் அற்ற செய்திகளை பொருட்படுத்த வேண்டாம் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் விடைத்தாள்களின் இரு பாகங்களும், தனித்தனியே ஸ்கேன் செய்து பிழைகள் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.