கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக தோனி மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். ரூ 100 கோடி மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தோனி தொடர்ந்த வழக்கில் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2013-ல் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஐபிஎல் இல் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சம்பத்குமார் பேசியதாக புகார் எழுந்தது. 15 நாள் சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்..