சுதந்திர தினத்தில் வழங்கப்பட இருக்கும் காவல் பதக்கங்கள் 6 போலீசாருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன், வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், தேனி எஸ்.பி. டோங்க்ரே பிரவீன் உமேஷ், சேலம் ரயில்வே துணை எஸ்பி குணசேகரன், நாமக்கல் உதவி ஆய்வாளர் முருகன், நாமக்கல் காவலர் குமார் ஆகியோர் பதக்கம் பெறவுள்ளனர். இவர்கள் அனைவரும் போதைப் பொருள் தடுப்பில் ஈடுபட்டோர்.