தமிழகத்தில் தற்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையானது, அடுத்த முறை திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஏழை, எளிய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பெண்களின் வாக்குகளைக் கவரும் வகையில் அமைந்துள்ள முதலமைச்சரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“>