அரசுடன் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் செப்.28ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். ஆசிரியர்கள் தொடர் போராட்டம் அறிவித்துள்ளதால், காலாண்டு விடுமுறைக்கு பின், அக்.3ல் மீண்டும் பள்ளி திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், 1-8ம் வகுப்பு வரை தள்ளிப்போகுமா என கேள்வி எழுந்துள்ளது