தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 10 மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், நீலகிரியில் ( 12 -20 செ.மீ., வரை) மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை, கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும்; எனவே, மக்கள் அலர்ட்டாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.